ஈராக்கிற்கு போப்பாண்டவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

Loading… பக்தாத், மார்ச் 6 – உள்நாட்டுக் கலவரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து அமைதிக்காக பாடுபடும்படி ஈராக் தலைவர்களை போப்பாண்டவர் கேட்டுக்கொண்டார். முதல்முறையாக ஈராக்கிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள போப்பாண்டவர் பக்தாத்தில் ஈராக் அதிபர் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் தலைவர்களிடையே உரையாற்றியபோது இந்த அறைகூவலை விடுத்தார். Loading… பல ஆண்டுகளாக ஈராக்கில் நடைபெற்று வரும் சமய மற்றும் தீவிரவாதத் கலவரங்கள் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென போப்பாண்டவர் பிரான்சிஸ் வலியுறுத்தினார். Loading…